sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முதுமலை அருகே செந்நாய் பலி; வனத்துறை தீவிர விசாரணை

/

முதுமலை அருகே செந்நாய் பலி; வனத்துறை தீவிர விசாரணை

முதுமலை அருகே செந்நாய் பலி; வனத்துறை தீவிர விசாரணை

முதுமலை அருகே செந்நாய் பலி; வனத்துறை தீவிர விசாரணை


ADDED : அக் 16, 2024 10:12 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முதுமலை, மசினகுடி அருகே சீகூர் வனப்பகுதியில் செந்நாய் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி கோட்டம் சீகூர் வனச்சரகம், ஆனைகட்டி வனப்பகுதியில் நேற்று வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில், மர்மமான முறையில் செந்நாய் இறந்து கிடப்பது தெரியவந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் உடலை மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரக்கர் தயானந்தன் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் செந்நாய்க்கு, 3 வயது இருக்கும். பிரேத பரிசோதனை முடிவு வந்தவுடன் மற்ற விபரங்கள் கூறப்படும்,' என்றனர்.

இதே வனச்சரகத்தில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, விஷம் வைத்து இரு செந்நாய்கள் கொல்லப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us