/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுத்தைகள் சண்டை தொழிலாளர்கள் அச்சம்
/
சிறுத்தைகள் சண்டை தொழிலாளர்கள் அச்சம்
ADDED : பிப் 06, 2026 05:58 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு டான் டீ பகுதியில், சிறுத்தைகள் சண்டையால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே சேரங்கோடு டான்டீக்கு உட்பட்ட பகுதியில் சின்கோனா உள்ளது. இந்த பகுதியை ஒட்டி படைச்சேரி கிராமம் மற்றும் டான் டீ குடியிருப்புகள் அமைந்துள்ளது.
அத்துடன் தேயிலை தோட்டத்திற்கு மத்தியில் புதர்கள் உள்ளது. அந்த பகுதியில் சிறுத்தைகள் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் பகல் இரண்டு சிறுத்தைகள் ஆக்ரோசமாக சண்டை போட்டதை பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேர சண்டைக்கு பின்னர் சிறுத்தைகள் அங்கிருந்து சென்றுள்ளது.
இதனால், இந்த பகுதி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சிறுத்தைகளை அங்கிருந்து வேறு பகுதிக்கு விரட்ட வேண்டும்,' என்றனர்.

