sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி

/

மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி

மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி

மாமழை போற்றுவோம்: நனவாகும் மின்சார கனவு; பெருகட்டும் விவசாய உற்பத்தி


ADDED : ஆக 06, 2025 08:54 PM

Google News

ADDED : ஆக 06, 2025 08:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நிருபர் குழு--

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்குறுத்தி உட்பட 13 அணைகள் , 12 மின் நிலையங்கள் உள்ளன.

தமிழகத்தில் அதிகளவில் நீர் மின் உற்பத்தி நீலகிரியில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மின் வினியோக மையப்பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. 12 மின் நிலையங்களில், 33 பிரிவுகளில், தினமும், 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

முன்கூட்டியே வந்த மழை நடப்பாண்டில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி கடந்த இரண்டு மாதங்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா, பார்சன்ஸ்வேலி பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்து நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது, 13 அணைகளில் தண்ணீர் இருப்பு முழு கொள்ளளவில் உள்ளன. மின் உற்பத்தியும் தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பவானி விவசாயிகளுக்கு பாசனம் இங்குள்ள அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக மின் உற்பத்தி ஒருபுறம் நடந்தாலும், அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீரால் ஈரோடு, பவானி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் பாசன விவசாயத்திற்கு பயன்படுகிறது.

மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் கெத்தை, குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா உள்ளிட்ட அணைகள் துார்வாரி பல ஆண்டுகள் ஆனதால் சேறும், சகதியும் அதிகரித்து தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின் வாரியம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பிரத்யேக திட்டத்தை வகுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் பிரேம்குமார் கூறுகையில்,'' ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை அந்தந்த பருவத்தில் துவங்குவதற்கு முன்பாகவே, அணைகள், மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அணைகளில் தண்ணீர் உள்ளதால் தடையில்லாமல் மின் உற்பத்தி நடந்து வருகிறது. கோடை காலத்தில் அணைகள் துார்வாருவது குறித்து மேலதிகாரிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

மின் உற்பத்திக்கான அணைகளில் தண்ணீர் இருப்பு நிலவரம் (அடி): -- 1. முக்குறுத்தி-:18---17 2. பைக்காரா-:100--96 3. சாண்டி நல்லா:-49---46 4. கிளன் மார்கன்-: 33--32 5. மாயார்-: 17--16 6. அப்பர் பவானி: -210- -200 7. பார்சன்ஸ்வேலி: 60-- 55 8. போர்த்தி மந்து:130--120 9. அவலாஞ்சி :171--160 10. எமரால்டு-: 184--174 11. குந்தா-: 89--88 12. கெத்தை-: 156--154 13. பில்லூர்-: 100--98



அணையை பராமரிக்க வேண்டும்

வினோத் குமார், நீலகிரி தன்னார்வலர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர்: குன்னுார் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ரேலியா அணை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அணையின் தண்ணீர் வெளியேறும் இடங்களில் உள்ள கற்கள் இடையே செடிகள் புதர்கள் வளர்ந்துள்ளன. செடிகள் வளர்வதால் ஏற்படும் வெற்றிடம் சேதமடைய வாய்ப்பு உள்ளது என கட்டட நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். பாதிப்பு ஏற்படும் முன்னதாகவும், பாதிப்பு இல்லாத வகையிலும் இவற்றை பாதுகாக்கப்பட வேண்டும். அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வீணாவதை தடுக்க அந்த இடத்தையும் பராமரித்து கூடுதலாக சேமிக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். கீழ் பகுதியில் விபரம் அடங்கிய கல்வெட்டும் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனை பராமரித்து பாதுகாக்க வேண்டும்.



வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும்

அருண், விவசாயி, கூடலுார்: கூடலுார் பாண்டியாறு- புன்னம்புழா ஆற்று நீர் இப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கும், சிறு விவசாயிகளுக்கு பயன்படுகிறது. மீதமுள்ள தண்ணீர் கேரளாவுக்கு சென்று கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், வீணாகும் தண்ணீரை பயன்படுத்தும் வகையில், இந்த ஆற்று நீரை மாயாற்றுடன் இணைத்தால் பவானி விவசாயிகள் பயன்பெற வாய்ப்புள்ளது.



300 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிப்பு

நடப்பாண்டில் மார்ச் மாதம் வரை, அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவால், தினசரி, 350 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்பின் மழை தொடர்ந்து பெய்ததால், தற்போது, தினசரி மின் உற்பத்தி, 650 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அடுத்து வரும் வடகிழக்கு பருவமழை குறைந்தாலும் மின் உற்பத்தியை சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.



மழையை கொண்டாடுவோம்

பெள்ளியப்பன், சமூக ஆர்வலர், ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவமழை என்பது தற்போது விட அதிகமாக பெய்வது வழக்கம். காலநிலை மாற்றம். வன அழிவு ஆகியவற்றால் கடந்த சில ஆண்டுகளாக மழை குறைவாக பெய்து வந்தது. நடப்பாண்டு சரியான கால கட்டத்தில் மழை பெய்து வருவதால், இதனை அதிக மழை என்ற பலரும் கூறுகின்றனர். இதேபோன்று மழை ஆண்டுதோறும் தொடர்தால் மட்டுமே நம் மாவட்ட விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை நிறைவு செய்ய முடியும். மேலும், அனைத்து பகுதிக்கும் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். அதனால், மழையை அனைவரும் கொண்டாட வேண்டும். இயற்கை விவசாயத்தை போற்ற வேண்டும்.



விவசாயம் செழிக்க வேண்டும்

சிவதாஸ், சுற்றுச்சூழல் ஆர்வலர், ஊட்டி: நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்தில் தற்போது மழை தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இயற்கை வளம் அதிகரித்து, விவசாயத்திற்கும், மின் உற்பத்திக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நீராதாரத்திற்கு முக்கியத்தும் பெற்ற சோலை வனங்கள், புல்வெளிகள் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழகம், கேரளா பகுதிகளுக்கு தண்ணீர் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இது போன்று பருவ மழை ஆண்டுதோறும் பொழிந்தால் விவசாயம் செழிக்கும்.



கைவிடப்பட்ட குடிநீர் திட்டம்

கோத்தகிரியில் கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து, கேர்பெட்டா புதுார் பகுதியில் கட்டப்பட்டுள்ள, சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்தி கரிக்கப்படுகிறது. பிறகு சக்திமலை 'மெகா' குடிநீர் தொட்டியில் தேக்கி வைத்து, நாகரின் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த அணை தண்ணீர் ஆரம்ப காலத்தில் போதுமானதாக இருந்தது. நாளடைவில் மக்கள் தொகை அதிகரிப்பால், சப்ளை செய்வதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பு, 'அளக்கரை மெகா குடிநீர் திட்டம்,' 13 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், வெள்ளோட்டம் விடப்பட்டதோடு, திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, ஜல் ஜீவன் திட்டத்தில், நகரப் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைக்க ஏதுவாக, பல கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டம் கைக்கூடும் பட்சத்தில், வரும் நாட்களில் நகர மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது.








      Dinamalar
      Follow us