/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு
/
'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு
'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு
'வெல்வோம் தமிழகம்' நிகழ்ச்சி பா.ஜ., பொறுப்பாளர்கள் சந்திப்பு
ADDED : பிப் 09, 2026 04:49 AM
குன்னூர்: -நீலகிரி மாவட்டம், குன்னூரில் பா.ஜ., சார்பில், 'வெல்வோம் தமிழகம்' பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் தருமன் தலைமை வகித்தார்.
குன்னூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளரான தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேகமாக செயல்பட்டு வருகிறது. மக்களின் பிரச்னைகளை கேட்டு அறியவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, தேர்தல் முன் பணிகளை செய்வது என சட்டசபை தொகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்படுகிறது, தேர்தல் முன் பணிகளை தயாரிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். என்றார்.தொடர்ந்து எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர்கள் ஈஸ்வரன், பாப்பண்ணன், பரமேஸ்வரன்,
பொது செயலாளர் குமார், நகர தலைவர் பாலாஜி, முன்னிலை வகித்தனர்.
நல திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சிவராஜ், மகளிரணி மாவட்ட தலைவி கல்பனா தேவி, பாபு, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

