sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

/

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை


ADDED : ஜன 10, 2024 11:49 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: பாலக்காடு மாவட்டத்தில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகளி கோட்டத்துறையை சேர்ந்தவர் கணேசன், 40, இவர், கடந்த, 2018 மே மாதம் 26ம் தேதி, 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். ஷோளயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.

இவ்வழக்கு நேற்று பாலக்காடு விரைவு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், அபராத தொகையாக 1.5 லட்சம் ரூபாயும் விதித்து நீதிபதி சஞ்சு தீர்ப்பளித்தார்.

அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சோபனா ஆஜரானார்.






      Dinamalar
      Follow us