sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொழிலாளர் தினத்தை ஒட்டி நாளை மதுக்கடைகள் மூடல்

/

தொழிலாளர் தினத்தை ஒட்டி நாளை மதுக்கடைகள் மூடல்

தொழிலாளர் தினத்தை ஒட்டி நாளை மதுக்கடைகள் மூடல்

தொழிலாளர் தினத்தை ஒட்டி நாளை மதுக்கடைகள் மூடல்


ADDED : ஏப் 29, 2025 09:03 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'தொழிலாளர் தினமான மே, 1ம் தேதி மதுக்கடைகள் செயல்படாது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப் பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள், தொழிலாளர் தினமான மே, 1ம் தேதி எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது.

குறிப்பிட்டநாளில், கட்டாயமாக, டாஸ்மாக் சில்லறை மது விற்பனை கடைகள், கிளப்கள் , ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்படும். உத்தரவை மீறி எவரேனும் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மது விற்பனை உரிமதாரர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம்-1937 மற்றும் சம்பந்தப்பட்ட இதர விதிகளின் கீழ், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, குறிப்பிட்ட நாளில் பார்கள் ஏதேனும் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில், அந்த விபரத்தை, ஊட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு மற்றும் அமலாக்கல்) 0423 -2223802, உதவி ஆணையர் (ஆயம்) 0423--2443693, குன்னுார் எடப்பள்ளி டாஸ்மாக் மேலாளர், 0423- -2234211 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us