sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1,164 கோடி கடனுதவி; தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்

/

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1,164 கோடி கடனுதவி; தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1,164 கோடி கடனுதவி; தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1,164 கோடி கடனுதவி; தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தகவல்


ADDED : நவ 16, 2024 06:49 AM

Google News

ADDED : நவ 16, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; ''நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலம், 1.55 லட்சம் பயனாளிகளுக்கு 1,164 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது,'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் நந்தட்டி அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்ட துவக்க விழா, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நேற்று நடந்தது. மாநில தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கூடலுார் ஜானகி அம்மாள் மண்டபத்தில், 71வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நடந்தது.

விழாவில், அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''கூட்டுறவு சங்கங்கள் மக்களுக்கு கடனுதவி வழங்கி அவர்களின் வாழ்க்கை தரம் உயர உதவி வருகின்றன. அதில், நீலகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 1.55 லட்சம் பயனாளிகளுக்கு, 1,164 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் விவசாயம் சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, அரசு நல உதவிகளை வழங்கினர்.

விழாவில், அரசு கொறடா ராமச்சந்திரன், கூடுதல் கலெக்டர் கவுசிக், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us