/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டச்சத்து ஆற்றலை பெற உள்ளூர் வளங்கள் அவசியம்: 'போஷன் அபியான்' திட்டத்தில் அறிவுறுத்தல்
/
ஊட்டச்சத்து ஆற்றலை பெற உள்ளூர் வளங்கள் அவசியம்: 'போஷன் அபியான்' திட்டத்தில் அறிவுறுத்தல்
ஊட்டச்சத்து ஆற்றலை பெற உள்ளூர் வளங்கள் அவசியம்: 'போஷன் அபியான்' திட்டத்தில் அறிவுறுத்தல்
ஊட்டச்சத்து ஆற்றலை பெற உள்ளூர் வளங்கள் அவசியம்: 'போஷன் அபியான்' திட்டத்தில் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2025 10:43 PM
ஊட்டி; 'உள்ளூர் வளங்களை பயன்படுத்தி பாரம்பரிய உணவு முறைகளை ஊக்குவிக்க வேண்டும்,' என, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி அருகே உள்ள எமரால்டு தக்கர் பாபா நகரில், சமீபத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ தாவர ஆராய்ச்சி மையத்தில், 'போஷன் பக்வாடா -2025' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நல்வாழ்வு நடைமுறைகளை மேம்படுத்துவது, ஊட்டச்சத்து குறித்த நடைமுறை அறிவை மேம்படுத்துவதையும், உள்ளூர் வளங்களை பயன்படுத்தி பாரம்பரிய உணவு முறைகளை ஏற்றுக் கொள்வதை நோக்கமாக கொண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பதப்படுத்தப்பட்ட உணவு
சமச்சீர் உணவுகளின் முக்கியத்துவம் பதப்படுத்தப்பட்ட உணவின் உடல் நல அபாயங்கள் மற்றும் பிராந்திய குறிப்பிட்ட பருவ கால உணவு பொருட்களை தினசரி நுகர்வுக்குள் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
'பழங்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள், மூலிகை, தேயிலை செடிகள்,' என, பல்வேறு கருப்பொருள் பிரிவுகளின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட, 44 தாவர இனங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டன.
தவிர, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் பிரிவில் பாரம்பரிய தானியங்களான எள், ராகி, ஓட்ஸ், குதிரை வாலி, பச்சைப் பயறு ஆகியவை ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பதிலும், நீடித்த ஆற்றலை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு தினை, வெல்லம் மற்றும் பருப்பு வகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மூலிகை, தேநீர் தயாரிப்பு முறை குறித்து விளக்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில்,'போஷன் அபியானின் நோக்கங்களில் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெண்களிடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை வடிவமைப்பதில் அங்கன்வாடி ஊழியர்கள் முக்கிய பங்கு குறித்து தெரிவிக்கப்படுகிறது.
படிப்படியாக மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,' என்றார்.