sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

/

பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி; கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை


ADDED : ஜூலை 30, 2025 08:33 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சீசன் காலங்கள் மட்டுமல்லாமல், பிற நாட்களிலும் கணிசமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றன.

இப்பூங்காவில் காலை நேரத்தில் நிலவும் இதமான சீதோஷ்ண நிலையால் அதிகாலை நடை பயிற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூங்கா அருகே உள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள கரடி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

இரு வாரங்களாக பூங்காவில் நுழைந்த அந்த கரடி அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து சுற்றுலா பயணியர், பூங்கா ஊழியர்களை அச்சுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட உள்ளுர் மக்களை கரடி துரத்தியதால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் பிபீத்தா கூறுகையில், ''தாவரவியல் பூங்காவில் கரடி ஒன்று சில நாட்களாக சுற்றித்திரிந்து ஊழியர்களை அச்சுறுத்தி வருகிறது. நடைப்பயிற்சி வந்தவர்களை துரத்தியதால் நடைபயிற்சியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கூண்டு வைத்து கரடியை பிடித்து வனத்தில் விட வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்,'' என்றார்






      Dinamalar
      Follow us