/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லாரி கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய ஓட்டுனர்
/
லாரி கவிழ்ந்து விபத்து: உயிர் தப்பிய ஓட்டுனர்
ADDED : பிப் 19, 2026 07:25 AM

கூடலுார்: முதுமலை தெப்பக்காடு அருகே, கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு அரிசி ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்த விபத்தில், ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர தப்பினார்.
கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிகேரளா செல்லும் லாரி நேற்று, காலை மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் நோக்கி வந்தது.
முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு அருகே, லாரி திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. விபத்தில், ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், 'யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை விரைந்து, வேறு லாரிக்கு மாற்றி எடுத்து செல்ல அறிவுறுத்தி உள்ளோம். அங்கு மின் கம்பம் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது,' என்றனர்.

