sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழமையான மூவுலகரசி அம்மன் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்

/

பழமையான மூவுலகரசி அம்மன் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்

பழமையான மூவுலகரசி அம்மன் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்

பழமையான மூவுலகரசி அம்மன் கோவில் நாளை மஹா கும்பாபிேஷகம்


ADDED : ஜன 31, 2025 11:07 PM

Google News

ADDED : ஜன 31, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டியில், 500 ஆண்டு பழமையான, காந்தள் மூவுலகரசி அம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.

ஊட்டி அருகே காந்தளில் உள்ள அருள்மிகு மூவுலகரசி அம்மன் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலின் ஸ்தல வரலாறு பதிவு குறித்து, 20 ஆண்டுகள் கோவிலை நிர்வகித்து வந்த குப்புசாமிபிள்ளை என்பவரின், வாரிசுகள் கூறியதாவது:

கோவில் இருக்கும் இடத்திற்கு வடக்கு திசையில், ஒரு கிணறு இருந்தது. பழங்குடிகள் அக்கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்லும் நேரத்தில், ஒரு பெண் துணைக்கு வந்து, தற்போது கோவிலின் கர்பகிரஹம் அமைந்திருக்கும் இடத்துக்கு சென்றுள்ளார். தங்களை தொடர்ந்து பாதுகாத்து வந்த பெண்ணை மக்கள் தாய்போல கருதி, அம்மன் கோவில் கட்டி வழிப்பட்டுள்ளனர். அந்த வழிபாட்டை, அப்பகுதியில் வாழ்ந்த 'கசவர்' என்ற பழங்குடிகள் நடத்தி வந்துள்ளனர்.

கோவில் கட்ட உதவிய ஆங்கிலேயர்


நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் காலத்தில், முதல் கல்பங்களா கட்டும் போது, காந்தள் வழியாக மைசூருக்கு குதிரையில் சென்ற ஜெனரல்வாப்சர் என்பவர் மூலம், இந்த கோவில் குறித்து அறிந்த சல்லிவன், இதனை புனரமைக்க தேவையான மரம்; கற்களை பழங்குடியினரிடம் கொடுத்துள்ளார். அதன்பின், 1882ல் மீண்டும் கோவில் புதுப்பிக்கப்பட்டது.

அப்போது நடந்த ஆய்வில் 'பழங்குடிகள் கட்டிய இந்த கோவில், 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்,' என, கூறப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

1940ல் கட்டப்பட்ட ராஜகோபுரம்


இந்த கோவிலில் கடந்த, 1940 ஆண்டு, 500 ரூபாய் மதிப்பில் ராஜாகோபுரம் கட்டப்பட்டு, மஹாகும்பாபிேஷம் நடந்துள்ளது.

1972ம் ஆண்டு கோவில், அறநிலையத்துறை வசம் சென்றபிறகு கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும், 1992 மற்றும் 2006ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தற்போது, அறநிலையத்துறை சார்பில், நாளை (2ம் தேதி) காலை, 6:30 மணி முதல், 7:25 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us