sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

/

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா


ADDED : ஜன 31, 2024 11:34 PM

Google News

ADDED : ஜன 31, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார் : அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.

அன்னுாரில், 400 ஆண்டுகள் பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில், 2 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கடந்த டிச. 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் தினசரி மண்டல பூஜை நடந்தது.

மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு, விஸ்வக் சேனா பூஜை, சங்கல்பம், புண்ணியஹாவாசனம், அனைத்து சுவாமிகளுக்கும் திருமஞ்சனம், கலச ஆராதனை, சாந்தி ஹோமம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது.

கரி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக அருள் பாலித்தார். திருக்கோவில் நற்பணி மன்றத்தினர், குலதெய்வத்தினர், என, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us