sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடி ஊர்வலம் பரவசம்

/

மாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடி ஊர்வலம் பரவசம்

மாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடி ஊர்வலம் பரவசம்

மாரியம்மன் கோவில் திருவிழா பறவை காவடி ஊர்வலம் பரவசம்


ADDED : மே 13, 2025 10:53 PM

Google News

ADDED : மே 13, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், ; பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவில் திருவிழா, 9-ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் மற்றும் கரகம் பாலித்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 108 தீப அலங்காரம், அன்னபூஜை, அன்னதானம் நடந்தது. மறுநாள் சிறப்பு பூஜைகள், 25க்கும் மேற்பட்ட பறவை காவடி, கத்தி காவடி, சுழல் காவடி ஊர்வலம் கொளப்பள்ளி பஜார் வழியாக, கோவிலுக்கு சென்றது. அங்கு அக்னிகாவடியுடன், தீக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மற்றும் விழா கமிட்டியினர், டான்டீ நிர்வாகம், தொழிலாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us