sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மாரியம்மன் கோவில் திருவிழா; வாத்தியங்கள் முழங்க பால் குட ஊர்வலம்

/

மாரியம்மன் கோவில் திருவிழா; வாத்தியங்கள் முழங்க பால் குட ஊர்வலம்

மாரியம்மன் கோவில் திருவிழா; வாத்தியங்கள் முழங்க பால் குட ஊர்வலம்

மாரியம்மன் கோவில் திருவிழா; வாத்தியங்கள் முழங்க பால் குட ஊர்வலம்


ADDED : ஏப் 29, 2025 09:06 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில், பால்குட ஊர்வலம் நடந்தது.

கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நாள்தோறும், பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மனுக்கு அலங்கார அபிஷேக மலர் வழிபாடு நடந்து வருகிறது.

விழாவில் ஒரு நிகழ்வாக, போயர் சமூகத்தினர் சார்பில், நேற்று காலை, 9:00 மணிக்கு, டானிங்டன் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவிலில் இருந்து, அம்மனுடைய சூலாயுதத்துடன், பால்குட ஊர்வலம் நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் கோவிலை அடைந்தது.

தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை, 6:00 மணிக்கு, அம்மன் அன்னலட்சுமி வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பெண்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us