sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்

/

போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்

போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்

போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்


ADDED : அக் 30, 2025 10:40 PM

Google News

ADDED : அக் 30, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆலி 55. இவர் சேரம்பாடி பஜாரில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடைக்கு வந்த மூன்று பேர், தாங்கள் சிறப்பு பிரிவு போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.

பின்னர் போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதாக, ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்தால் சிறை மற்றும் அபராத தொகை செலுத்த வேண்டும் என ஆலியிடம் தெரிவித்தனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று கூறியஆலி, அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு இவரின் மனைவி கதீஜாவிடமிருந்து இரண்டரை பவுன் தங்க சங்கிலியை வாங்கி அவர்களிடம் கொடுத்ததுடன், வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து அருகில் உள்ள வியாபாரிகளிடம் கூறியபோது, சந்தேகமடைந்த வியாபாரிகள் சேரம்பாடி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் விசாரணை செய்ததில், வந்தவர்கள் போலி ஆசாமிகள் என்பதும், அவர்கள் போலீசார் இல்லை என்பதும் தெரியவந்தது.

இது குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us