sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பணம் மோசடி

/

நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பணம் மோசடி

நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பணம் மோசடி

நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பணம் மோசடி


ADDED : ஜூலை 03, 2025 12:29 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் படத்தை பயன்படுத்தி, 'வாட்ஸ்- ஆப்' வாயிலாக பணம் மோசடி செய்ய நடந்த முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா பணியாற்றி வருகிறார். அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் போலி 'வாட்ஸ் ஆப்' கணக்கை உருவாக்கியுள்ளனர். அந்த எண்ணில், மாவட்ட கலெக்டர் போனில் உள்ள பல எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த குறுஞ்செய்தியில்,'எனது வங்கிக் கணக்கில் பிரச்னை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை; நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், என் வேலை முடிந்ததும் உங்களுக்கு மீண்டும் பணம் அனுப்பு கிறேன்,' என, கலெக்டர் கூறுவது போல் உள்ளது.

சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர், இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். கலெக்டர் லட்சுமி பவ்யா உடனடியாக மாவட்ட எஸ்.பி., நிஷாவை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட போலீஸ் எஸ்.பி., உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 'இந்த போலி வாட்ஸ் அப் கணக்கு வியட்நாமில் துவக்கப்பட்டுள்ளது,' என, தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் பிரவீணா தேவி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், 'தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம்,' என, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தனது, 'வாட்ஸ்- ஆப்' ஸ்டேட்டஸ் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us