sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தோடர் பழங்குடிகளின் 'மொற்பர்த்' பண்டிகை; ஊட்டி முத்தநாடு மந்தில் கோலாகலம்

/

தோடர் பழங்குடிகளின் 'மொற்பர்த்' பண்டிகை; ஊட்டி முத்தநாடு மந்தில் கோலாகலம்

தோடர் பழங்குடிகளின் 'மொற்பர்த்' பண்டிகை; ஊட்டி முத்தநாடு மந்தில் கோலாகலம்

தோடர் பழங்குடிகளின் 'மொற்பர்த்' பண்டிகை; ஊட்டி முத்தநாடு மந்தில் கோலாகலம்


ADDED : ஜன 06, 2025 02:40 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரியில் மட்டுமே வசிக்கும், தோடர் பழங்குடி மக்களின், 'மொற்பர்த்' பண்டிகை முத்தநாடு மந்தில் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில், வசித்து வரும் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான, 'மொற்பர்த்' பண்டிகை ஆண்டுதோறும், டிச., இறுதியில் அல்லது ஜன., முதல் வாரத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தோடரின மக்கள் பங்கேற்பர். நடப்பாண்டின் பண்டிகை தோடர் மந்துகளின் (கிராமம்) தலைமையிடமான, தலைக்குந்தா அருகே உள்ள முத்தநாடு மந்தில் நேற்று காலை நடந்தது.

பெரும்பாலான தோடரின மக்கள் பங்கேற்று பழமை வாய்ந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தோடரின ஆண்கள் மட்டும் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து மண்டியிட்டு வழிபாடு நடத்தினர். பின், கோவிலை சுற்றி தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

தோடர் இளைஞர்கள், இளவட்ட கல்லை துாக்கி தங்களின் வலிமையை நிரூபித்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு, பால், நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பிரசாதம் வழங்கப்பட்டது. உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை, தோடரின தலைவர் மந்தேஷ் குட்டன், முன்னாள் தலைவர் அடையாள் குட்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us