sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை மலைவாழ் மக்கள் தடுக்க வேண்டும்'

/

'வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை மலைவாழ் மக்கள் தடுக்க வேண்டும்'

'வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை மலைவாழ் மக்கள் தடுக்க வேண்டும்'

'வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை மலைவாழ் மக்கள் தடுக்க வேண்டும்'


ADDED : மார் 09, 2024 07:31 AM

Google News

ADDED : மார் 09, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : ''வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க, மலைவாழ் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என, மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் பேசினார்.

மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு ஆதிவாசி காலனியில், மலைவாழ் மக்களின் வாழ்வாதார முன்னேற்ற திட்டத்தின் வாயிலாக, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் பேசியதாவது:

கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் காய்ந்த இலைகளும், புற்களும் சருகு போல் உள்ளன. புற்கள் நன்கு காய்ந்துல்லதால், எளிதில் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது. எனவே காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க, மலைவாழ் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

வனப்பகுதி அருகே இலை, தலை மற்றும் காய்ந்த செடிகளுக்கு தீ வைக்க கூடாது. யாரேனும் வனப் பகுதி வழியாக பீடி, சிகரெட் குடித்துச் செல்வதை பார்த்தால், இப்பகுதியில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனக் கூற வேண்டும். வனப்பகுதி ஒட்டியுள்ள வசிக்கும் குடும்பத்தினர், திறந்தவெளியில் சமையல் செய்ய கூடாது. வனவிலங்குகள், சந்தேகத்திற்கு இடமளிக்கும், ஆட்கள் நடமாட்டம் மற்றும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகள், வனம் மற்றும் மலைப்பகுதியிலும் அமைந்துள்ளன. சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், மது பாட்டில்கள், காலியான பிளாஸ்டிக் பாட்டில்கள், வனப்பகுதியில் போடக்கூடாது. கல்லாற்றைக் கடந்து சிலர் வனப்பகுதிக்குள் செல்வதாக புகார்கள் வந்துள்ளன. வனத்துறையினர் சோதனையின் போது, வனப்பகுதியில் இருப்பவர்களை பிடித்து, போலீசில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு வனச்சரக அலுவலர் பேசினார்.






      Dinamalar
      Follow us