sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

/

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு; நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு


ADDED : ஜூன் 27, 2025 09:16 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டி நகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி நகராட்சியில் சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் வினோத், துணைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பல கவுன்சிலர்கள் பேசுகையில், 'நகராட்சியின் பல பகுதிகளில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. தெருவிளக்குகள் எரியாததால் இரவில் நகர் பகுதியில் உலாவும் நாய், சிறுத்தை, கரடியால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி பணிகள் குறித்து மன்ற கூட்டத்தில் தெரிவித்தாலும், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

குண்டும், குழியுமான சாலை மழையால் சேறும்,சகதி அதிகரித்து பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதால் சரிவர குடிநீர் கிடைப்பதில்லை.

வார்டுகள் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தெரிவித்தாலும் முறையாக ஆய்வு மேற்கொள்வதில்லை இதனால், வார்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர்கள் பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளாதது ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது,' என்றனர்.

கமிஷனர் வினோத் பேசுகையில்,''ஒவ்வொரு வார்டு வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும்,'' என்றார்

இதற்கிடையே, நகராட்சி பொறியாளர் சேகர் மீது, பெரும்பாலான கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பியதால், திடீரென மன்ற கூட்டத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரச்னை தீரும்...

நகராட்சி தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''ஊட்டி நகராட்சி பெரும்பாலான வார்டுகளுக்கு பார்சன்ஸ்வேலி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சமீபத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் விழுந்து மின் தடை ஏற்பட்டதால், 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் தடைபட்டது. நாள்தோறும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகத்திற்கு அதிகளவிலான டீசல் தேவைப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, வனப்பகுதியில் கேபிள் அமைக்க, 4 கி.மீ., துாரத்திற்குதான் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். அதற்கான விரிவான திட்டறிக்கை தயாரித்து வனத்துறை மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்துவிடும். ஊட்டி நகருக்கான தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்,''என்றார்








      Dinamalar
      Follow us