sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 நேரு பூங்காவில் பராமரிப்பு பணி :கூடுதல் பணியாளர்கள் தேவை

/

 நேரு பூங்காவில் பராமரிப்பு பணி :கூடுதல் பணியாளர்கள் தேவை

 நேரு பூங்காவில் பராமரிப்பு பணி :கூடுதல் பணியாளர்கள் தேவை

 நேரு பூங்காவில் பராமரிப்பு பணி :கூடுதல் பணியாளர்கள் தேவை


ADDED : நவ 12, 2025 11:03 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி நேரு பூங்காவில் புல் தரையை, நேர்த்தியாக வெட்டி பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப் படுகிறது. உள்ளூர் மக்கள் ஓய்வெடுக்க உகந்த இடமாக பூங்கா அமைந்துள்ளது. கோத்தகிரி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பிறகு, இங்கு பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பூங்காவில், டிக்கெட் வசூலிப்பாளர் உட்பட மூவர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், பூங்காவை மேம்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இந் நிலையில், அவ்வப்போது பெய்து வரும், சாரல் மழையில், பூங்காவின் புல் தரையில், புற்கள் வளர்ந்து காணப்படுகிறது.

இதனை நேர்த்தியாக வெட்டி சீரமைக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி, பூங்காவை சிறப்பாக பொலிவுப்படுத்தினால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us