sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கோத்தகிரியில் கரடி தாக்கி நேபாள பெண் படுகாயம்

/

 கோத்தகிரியில் கரடி தாக்கி நேபாள பெண் படுகாயம்

 கோத்தகிரியில் கரடி தாக்கி நேபாள பெண் படுகாயம்

 கோத்தகிரியில் கரடி தாக்கி நேபாள பெண் படுகாயம்


ADDED : நவ 16, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி அருகே கரடி தாக்கியதில் நேபாளம் நாட்டை சேர்ந்த பெண் தொழிலாளி படுகாயமடைந்தார்.

நீலகிரி வன கோட்டம், கோத்தகிரி வனச்சரகம், குஞ்சப்பனை பிரிவிற்கு உட்பட்ட, மேல் தட்டப்பள்ளம் ஓமக்குழியில், தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிந்து வருபவர், நேபாளம் நாட்டை சேர்ந்த பகவத்சிங் மனைவி தேவி, 60; இவர், வழக்கம் போல் நேற்று காலை, பசுந்தேயிலை பறிப்பதற்காக, தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, செடி மறைவில் பதுங்கி இருந்த கரடி, திடீரென தேவியை தாக்கியது. காயமடைந்த அவர், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோத்தகிரி வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று, தேவிக்கு ஆறுதல் கூறினர். 'மருத்துவ செலவிற்காக, இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தனர்.

தோட்டத்தில் பதுங்கி உள்ள கரடியை வனப்பகுதிக்கு விரட்ட, வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us