/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
/
புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 02, 2025 05:46 AM

ஊட்டி : புத்தாண்டை ஒட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறை ஒட்டி, கடந்த ஒரு வாரமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு, ஊட்டியில் சுற்றுலா பயணியர் திரண்டனர். நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தனியார் ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா துறையின் 'ஓட்டல் தமிழ்நாடு' அரங்கில், ஆடல், பாடலுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
நேற்று காலை முதல், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம்,ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பிற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, கேரளா, கர்நாடக சுற்றுலா பயணிகளுடன், வெளிநாட்டினர் அதிகளவில் வருகை தந்தனர். ஊட்டியின் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.