sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 'போனஸ்' இல்லை: கவலையில் குடும்பத்தினர்

/

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 'போனஸ்' இல்லை: கவலையில் குடும்பத்தினர்

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 'போனஸ்' இல்லை: கவலையில் குடும்பத்தினர்

வேட்டை தடுப்பு காவலர்களுக்கு 'போனஸ்' இல்லை: கவலையில் குடும்பத்தினர்


ADDED : அக் 27, 2024 11:54 PM

Google News

ADDED : அக் 27, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு இல்லாத நிலையில், தீபாவளி போனசும் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு, மனித- விலங்கு மோதல் மற்றும் மரங்கள் கடத்தலை தடுக்க வனத்துறையில், வேட்டைதடுப்பு காவலர்கள் மற்றும் வன பாதுகாப்பு குழுவினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

'வன அதிகாரிகளின் வாகனங்களை ஓட்டுதல்; யானை கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவதை கண்காணித்து தடுத்து விரட்டுதல்; வேட்டை வழக்குகளுக்கு உதவி செய்தல்; கணக்கெடுப்பு பணி,' உட்பட பல்வேறு பணிகள் புரிந்தாலும் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ளது.

கடந்த ஆட்சியில் நடவடிக்கை


கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2019-ல், அ.தி.மு.க., ஆட்சியில் வேட்டை தடுப்பு காவலர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில், 4,125 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, குன்னுார் தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, 'தமிழகம் முழுவதும் வேட்டை தடுப்பு காவலர்களை அதிகரிக்கவும், சம்பளத்தை, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் பரிசீலனை செய்யப்படும்,' என, கடந்த, 2022ம் ஆண்டு, தெரிவித்தும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது தீபாவளி போனஸ் வழங்கப்படாததால் வேட்டை தடுப்பு காவலர்கள் கவலையில் உள்ளனர்.

சில வேட்டை தடுப்பு காவலர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளாக வெயில், மழை மற்றும் அட்டை பூச்சி கடிக்கு இடையே சிரமங்களுடன் பணிபுரிந்து வருகிறோம். பணி நிரந்தரம், சம்பள உயர்வு உட்பட எந்த சலுகையும் கிடைக்காததால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி உட்பட பண்டிகை கால போனஸ் எதுவும் வழங்கப்படாததால், குழந்தைகள் கொண்டாட முடிவதில்லை. பண்டிகை காலங்களிலும் பணியாற்றி வருகிறோம். எனவே, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us