sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மனித -- விலங்கு மோதல் வேண்டாம்: கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

/

மனித -- விலங்கு மோதல் வேண்டாம்: கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

மனித -- விலங்கு மோதல் வேண்டாம்: கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு

மனித -- விலங்கு மோதல் வேண்டாம்: கலை நிகழ்ச்சியில் விழிப்புணர்வு


ADDED : ஏப் 03, 2025 08:34 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 08:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:

கோத்தகிரி கக்கல்தொரை பஜாரில், மனித- விலங்கு மோதல் குறித்து, கலை நிகழ்ச்சியில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், சமீப காலமாக மனித- விலங்கு மோதல் அதிகரித்து, பலர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவு பேரில், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் சார்பில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், 'காடுகள் வளர்ப்பதன் முக்கியத்துவம், பல்லுயிர் சூழல் உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் மனித- விலங்கு மோதலை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்,' குறித்து வீதி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பல பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us