ADDED : அக் 07, 2025 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுார் தேவர்சோலை கொட்டாய்மட்டம் பாரகல் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்,38. இவர் நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, எதிரே காட்டு யானை வந் துள்ளது. யானையை பார்த்தவர் பைக்கை நிறுத்திவிட்டு ஓடி தப்பிக்க முயன்றார். யானை அவரை துரத்தி தாக்கி சென்றுள்ளது. அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். வனத் துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு செய்தனர். யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கூறுகையில், 'தொடரும், யானை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.