sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய ஊட்டி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு

/

லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய ஊட்டி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு

லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய ஊட்டி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு

லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய ஊட்டி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு


ADDED : நவ 13, 2024 06:23 AM

Google News

ADDED : நவ 13, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, : ஊட்டி நகராட்சி கமிஷனர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதால், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த ஆக., மாதம் பொறுப்பேற்று கொண்டார். 'பொறுப்பேற்ற நாளிலிருந்து அனுமதி இல்லாத மற்றும் விதிமீறிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்,' உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பணம் வாங்கி கொண்டு அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களாக, இவரை கண்காணித்து வந்தனர். கடந்த, 10ம் தேதி ஊட்டியில் இருந்து சொந்த ஊரான சென்னைக்கு வாடகை காரில் சென்ற போது, சிலரிடம் பணம் வாங்கி செல்வதாக, ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பில் காரை மடக்கி பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அதில், 11.70 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இதை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் பொறுப்பிலிருந்து அவரை தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். ஊட்டி நகராட்சி பொறியாளருக்கு நகராட்சி கமிஷனர் பணி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

பணம் கொடுத்தவர்களிடம் விசாரணை...!

ஊட்டி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ஜெயகுமார் கூறுகையில், ''ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, கட்டட புனரமைக்கு அனுமதி, பார்க்கிங் டெண்டர், குடியிருப்பு கட்டடம் வர்த்தக ரீதியாக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு, லஞ்சமாக பணம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.அதன்படி, கணக்கில் வராத, 11.70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் எப்படி வந்தது என்பது குறித்து, கார் டிரைவர் ராஜா கவுடா கூறியதன் பேரில், பணம் கொடுத்த நபர்களில், ரவிபிரசாத், சாகுல்ஹமீது உட்பட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்தவுடன் மற்ற விபரம் கூறப்படும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us