/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் 'ஆர்கிட்' செடியில் பூக்கள்; சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
/
கூடலுாரில் 'ஆர்கிட்' செடியில் பூக்கள்; சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
கூடலுாரில் 'ஆர்கிட்' செடியில் பூக்கள்; சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
கூடலுாரில் 'ஆர்கிட்' செடியில் பூக்கள்; சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
ADDED : ஆக 24, 2025 11:12 PM

கூடலுார்; கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்தில், அரிய வகை 'பட்டன்' ஆர்கிட் செடியில் மலர்ந்துள்ள பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கூடலுார் பகுதி, பல அரிய வகை தாவரங்களை வாழ்விடமாக கொண்டுள்ளது. இங்கு பூச்சிகளை உண்டு வாழும் மூன்று வகை தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோன்று, ஏராளமான ஆர்கிட் செடிகளும் கண்டறிந்துள்ளனர். இங்கு கண்டறியப்பட்ட,75க்கும் மேற்பட்ட ஆர்கிட் மலர் செடிகள், ஜீன்புல் தாவர மையத்தில் வளர்க்கப்படுகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆர்கிட் செடிகளில பூக்கள் பூக்க துவங்கியுள்ளது.
அதில், முக்கியமானது, 'பட்டன்' ஆர்கிட். மரங்களை ஒட்டுண்ணிகளாக வாழும் இவைகளின் தண்டு, மரப்பட்டையில், தொடர்ச்சியாக வளர்ந்து காணப்படுகிறது. இந்த செடியில் பூத்துள்ள சிறிய பூக்கள் சுற்றுலா பயணிகளை வியப்படைய செய்துள்ளது. சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'மரப்பட்டையில் பட்டன் போன்று காணப்படும், தண்டிலிருந்து வளரும் செடியில் பூத்துள்ள பூக்கள், பார்ப்பதற்கு அரிதாகவும் வியப்பாகவும் உள்ளது,' என்றனர்.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில், 'ஆர்கிட் செடிகள் மரங்கள், ஈரத் தன்மை கொண்ட பாறைகளில் ஒட்டுண்னியாக வளர கூடியவை.
சில ஆர்கிட்டுகள் நிலத்திலும் வளர்கிறது. இவைகள் வடிவத்திலும் வண்ணத்திலும் மாறுபட்டவை. மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இவைகளை பாதுகாப்பது அவசியமாகும்,' என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஜீன்புல் தாவர மையத்தில், 'ஆர்கிடோரியம்' எனப்படும் ஆர்கிட் பூங்காவை மேம்படுத்த அரசு, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதில், முதல் கட்டமாக அரசு வழங்கியுள்ள, 75 லட்சம் ரூபாய் நிதியில் ஆர்க்கிடோரியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது,'என்றனர்.

