sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு

/

 சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு

 சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு

 சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்ய உத்தரவு


ADDED : ஜன 24, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பகுதி போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் பஸ்கள், கடைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில், பொதுமக்களின் செயல்பாடுகள் மற்றும் சமூகவிரோத செயல்களை கண்காணிக்கும் வகையில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக அரசு அலுவலகங்களில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள், போலீஸ் நிலையங்களுக்கு வரும் நபர்களின் செயல்பாடுகள் குறித்து, கண்காணிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், கடந்த, 19ம் தேதி தேவாலா மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்ய முயன்ற போது கேமராக்கள் பழுதடைந்து இருந்தது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து கேமராக்கள் பழுது நீக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வரும் நிலையில், பிற போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசுத்துறை அலுவலகங்களில், செயல்படும் சி.சி.டி.வி. கேமராக்களின், செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து, ஒவ்வொரு அரசு துறை அலுவலகங்களிலும், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடு குறித்து, ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us