sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்

/

 பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்

 பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்

 பார்சன்ஸ்வேலி நீரேற்று நிலையத்தில் ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் மின் திட்டம்


ADDED : டிச 30, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்தில், 6.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிலத்தடி மின் இணைப்பு திட்டப்பணிகள் துவக்கப்பட்டன.

ஊட்டி பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கம் நீரேற்று நிலையம், நகராட்சி மக்களுக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நீரேற்று நிலையங்களுக்கு, அடர்ந்த மரங்களுக்கு இடையில் மின்சாரம் செல்வதால், பருவ மழை காலங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால், மின்வினியோகம் சரி செய்ய தாமதம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், ஊட்டி நகரம் முழுவதும் சீரான மின் வினியோகம் தொடர்ந்து வழங்க ஏதுவாக, மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, 6.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடியில் மின் இணைப்பை கொண்டு செல்ல பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஊட்டி நகராட்சி பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வாயிலாக, குடிநீர் வழங்க முடியும். இந்த பணியை நீலகிரி தொகுதி எம்.பி., ராஜா துவக்கி வைத்தார். இதில், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், கலெக்டர் லட்சுமி மற்றும் மேற்பார்வை பொறியாளர் சாந்த நாயகி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us