sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வனப்பகுதியில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்

/

வனப்பகுதியில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்

வனப்பகுதியில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்

வனப்பகுதியில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடிகள்; விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அபாயம்


ADDED : ஆக 14, 2025 08:05 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; 'முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் செடிகளை, முழுமையாக அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம், அதனை ஒட்டிய வெளிமண்டலமான மசினகுடி வனப்பகுதியில் உண்ணி, பார்த்தீனியம் போன்ற களைச்செடிகள் அதிக அளவில் வளர்கிறது. இவைகளால் வனத்துக்கு வனவிலங்குகளுக்கு எந்த பயனும் இல்லை.

இவைகளின் பரப்பளவு அதிகரித்து வருவதால், வனவிலங்கு விரும்பி உண்ணக்கூடிய செடிகள், தாவரங்கள் வளர்வது இடையூறாக உள்ளது. இவைகளை வனத்துறையினர், அவ்வப்போது அகற்றி வந்தாலும், வளர்வதை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, உண்ணி செடிகள் அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால், பார்த்தீனியம் உள்ளிட்ட பயனற்ற களை செடிகளை அகற்ற முழுமையான நடவடிக்கை இல்லை. மசினகுடி வனக்கோட்ட பகுதியில், தற்போது பார்த்தீனியம் செடிகள் அதிக பரப்பளவில் வளர்ந்துள்ளது.

இதனால், தாவர உண்ணிகளுக்கு உணவு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இவைகளின் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் தாவர உண்ணிகளுக்கு அதிக உணவு பற்றாக்குறை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த செடிகளை, வேரோடு அகற்றி அழிக்க வன துறையினர் தொடர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் பார்த்தீனியம் செடிகளில் அதிகரித்து வருவதால், அப்பகுதியில் மற்ற தாவரங்கள் புற்கள் வளர்வதில்லை.

இந்த செடிகளின் பூக்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் சுவாசம் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

வனத்துக்கும் வனவிலங்குகள் எந்த பயனும் இல்லாத, பார்த்திணியும் செடிகளால் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, பார்த்தீனியம் செடிகளை, முழுமையாக அகற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us