/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் அதிருப்தி
/
பஸ் போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் அதிருப்தி
ADDED : மார் 09, 2026 06:19 AM
கூடலூர்: கூடலூர் - ஆருட்டுப்பாறை இடையே, திடீரென பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலூரிலிருந்து, ஓவேலி சூண்டி, மரப்பாலம் வழியாக ஆரூட்டுப்பாறைக்கு, இயக்கப்பட்டு வரும், அரசு பஸ் பழுதாகியதால், இரண்டு நாட்களாக அப்பகுதிக்கு பஸ் இயக்கவில்லை. இதனால், பஸ் வசதி இன்றி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேறு பஸ் இயக்காததால், தனியார் வாகனங்களில், 40 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர். சிரமத்தை தவிர்க்க, இப்பகுதிக்கு தடையின்றி பஸ் இயக்க வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இச்சாலையில், மரப்பாலம் அருகே, ஆற்றைக் கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள குறுகிய இரும்புபாலத்தை, தற்போது இயக்கப்பட்டு வரும் பஸ் மட்டுமே கடந்து செல்ல முடியும். வேறு பஸ்கள் கடந்து செல்ல முடியாது. இதனால், பழுதடைந்த பஸ் சீரமைக்கும் பணி காரணமாக, தற்காலிகமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பழுது சீரமைக்கப்பட்ட பின் பஸ் இயக்கப்படும்.' என்றனர்.

