sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 சேதமான சாலையில் ஒட்டு போடும் பணி; வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி

/

 சேதமான சாலையில் ஒட்டு போடும் பணி; வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி

 சேதமான சாலையில் ஒட்டு போடும் பணி; வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி

 சேதமான சாலையில் ஒட்டு போடும் பணி; வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி


ADDED : பிப் 13, 2026 05:35 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் நெடுஞ்சாலைகளை, சீரமைப்பதாக கூறி ஒட்டு போடும் பணியில் ஈடுபடுவதால் வாகன ஓட்டுனர்கள்அதிருப்தி அடைந்து உள்ளனர்.

கூடலுாரில் இருந்து பந்தலுார் வழியாக உள்ளூர் கிராமங்களுக்கு மட்டும் இன்றி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கும், பந்தலுாரில் இருந்து ஊட்டி, கோவை மற்றும் கர்நாடகா, கேரளா மலப்புரம் பகுதிகளுக்கும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதில், கூடலுார்--கோழிக்கோடு நெடுஞ்சாலை சேதமடைந்து குழிகளாக மாறி வருகிறது.

இதனால், கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களில் வரும், பயணிகள் சிரமப்பட்டு பயணிப்பதுடன், வாகனங்களும் சேதமடைந்து நடுவழியில் நின்று விடுகிறது.

இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இந்த சாலையில், யானைகள் உலா வரும் நிலையில் அச்சத்துடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது.

இந்நிலையில், சேதமான சாலைகளை சீரமைப்பதாக கூறி, நெடுஞ்சாலைத்துறை மூலம் பெயரளவிற்கு, ஜல்லி கற்களை கொட்டி ஒட்டு போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், ஏற்கனவே சேதடைமந்து காணப்படும் சாலையில், ஜல்லி கற்கள் சிதறி, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.

இதேநிலை தொடர்ந்தால் வாகன ஓட்டுனர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே, சாலைகளை தரமாக சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us