/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நிழல் குடை பயன்படுத்த மக்களுக்கு தடை; 'தினமலர்' செய்தி எதிரொலி
/
சேதமடைந்த நிழல் குடை பயன்படுத்த மக்களுக்கு தடை; 'தினமலர்' செய்தி எதிரொலி
சேதமடைந்த நிழல் குடை பயன்படுத்த மக்களுக்கு தடை; 'தினமலர்' செய்தி எதிரொலி
சேதமடைந்த நிழல் குடை பயன்படுத்த மக்களுக்கு தடை; 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஆக 08, 2025 08:29 PM

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை சாலை அருகே, பயணிகள் காத்திருந்து பஸ் ஏறி பயணிக்க வசதியாக நிழல் குடை அமைத்துள்ளனர். இந்த நிழல் குடையின் மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டு, சில இடங்களில் சிமென்ட் பெயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையில், மழைநீர் கசிவு வருவதால் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தி, 'தினமலர்' நாளிதழில் வெளியானது.
தொடர்ந்து, தேவர்சோலை பேரூராட்சி ஊழியர்கள் நேற்று நிழல் குடையை ஆய்வு செய்து, அதனுள் யாரும் செல்லாத வகையில் தடைவித்தனர். மேலும்,'நிழல் குடையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளபடுவதால், பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை,' என, அறிவிப்பை ஒட்டி உள்ள னர்.

