/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் உறை பனி; கடும் குளிரால் மக்கள் அவதி
/
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் உறை பனி; கடும் குளிரால் மக்கள் அவதி
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் உறை பனி; கடும் குளிரால் மக்கள் அவதி
ஊட்டி சுற்று வட்டார பகுதியில் உறை பனி; கடும் குளிரால் மக்கள் அவதி
ADDED : டிச 23, 2024 10:25 PM
ஊட்டி; ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் உறை பனி தென்பட்டது.
நீலகிரியில் ஆண்டுதோறும் அக்., மாதம் இறுதி வரை நீர் பனி தென்படுகிறது. நவ.,மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் உறைப்பனி தென்படுகிறது. நடப்பாண்டு, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. சில நாட்களாக வெயிலான காலநிலை நிலவியது.
இந்நிலையில், நேற்று காலை, நகரின் பல்வேறு பகுதிகளில் உறைப்பனி தென்பட்டது. குறிப்பாக, காந்தள், தலைக்குந்தா, எச்.பி.எப்., சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதி புல்வெளிகளில் உறைப்பனி தென்பட்டது. பகல் நேரத்தில் வெயிலான காலநிலை நிலவியது. இதனால், ஊட்டியில் நேற்று, அதிகபட்சம், 17 டிகிரி; அதிகாலை, 5.2 டிகிரி 'சி' வெப்பநிலை பதிவாகி இருந்தது. பனியின் தாக்கத்தால் காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. தேயிலை தோட்டம் மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். மறுபுறம், தேயிலை செடிகள், மலை காய்கறிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர்.

