sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்

/

யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்

யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்

யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்


ADDED : ஆக 11, 2025 11:54 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் பகுதியில் காட்டு யானை தாக்கி பலியானவர் உடலை சாலையில் வைத்து மக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஓவேலி நியூஹோப் பகுதியில் உள்ள, தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தவர் மணி,63. இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்பவரும், நேற்று காலை, 9:00 மணிக்கு ஏலக்காய் தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அங்கு படுத்திருந்த காட்டு யானை திடீரென எழுந்து அவர்களை துரத்தியது. இருவரும், தப்பி ஓடினர். அப்போது, யானை மணியை தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சந்திரமோகன் உயிர் தப்பினார். யானை அதே பகுதியில் முகாமிட்டிருந்தது.

உடலை சாலையில் வைத்து போராட்டம் இந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த மக்கள் இறந்தவர் உடலை எடுத்து வந்து, காலை, 10:30 மணி முதல் ஓவேலி சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலனும் பங்கேற்றார். அப் பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, வனச்சரகர்கள் ரவி, மீரான் இலியாஸ் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்தினர். மக்கள் அதனை ஏற்காமல் வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருந்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த, கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு, போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மற்றும் மக்களிடம் பேசுகையில், ''உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று, இங்கு முகாமிட்டுள்ள யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவர்சோலையில், மாடுகளை தாக்கி கொன்ற புலியை பிடிக்க அனுமதி பெற்ற பின் சிலர், தங்களால் அனுமதி கிடைத்தது கூறி வருகின்றனர்,'' என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுார் எம்.எல்.ஏ., பேசுகையில், ''மக்கள் போராட்டத்தையும், மக்களுக்காக போராடுபவர்களையும் விமர்சனம் செய்ய கூடாது,'' என கூறி, டி.எப்.ஓ.,விடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டடார். டி.எஸ்.பி., அவரை சமாதானப்படுத்தினார். அதன்பின் மக்கள் சமாதானம் அடைந்து, 3:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. நியூஹோப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அவசர கால உதவி எண் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட மக்கள், வனவிலங்கு பாதிப்பு தொடர்பான தகவல்களை உடனே தெரிவிக்க, அவசர கால உதவி எண் (1800-425-4343) வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. அதனை, மாநில சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டார். நிகழ்ச்சியில், வன உயிரின தலைமை முதன்மை வன பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா, முதுமலை கள இயக்குனர் கிருபா சங்கர், நீலகிரி கோட்ட வன அலுவலர் கவுதம் ஆகியோர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us