sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்

/

வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்

வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்

வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாய்


ADDED : ஜூன் 06, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் அருகே, வீட்டுக்குள் வந்த சிறுத்தையை விடாமல் துரத்திய வளர்ப்பு நாயை உள்ளூர் மக்கள் பாராட்டினர்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே எருமாடு பனஞ்சிரா நேதாஜி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் முன்பக்க வாசலில் நின்றிருந்த நாயை, சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றது.

அப்போது, தொடர்ந்து குரைத்த நாயை பிடிக்க முயன்றபோது, சிறுத்தையிடமிருந்து நாய் தப்பியது. சிறுத்தை மீண்டும் பிடிக்க முயன்றபோது, நாய் நேரடியாக நின்று குரைத்து, சிறுத்தையை எதிர்த்தது. சிறுத்தை திடீரென கேட்டிற்கு வெளியே குதித்து ஓடி தப்பியது.

இதை அறிந்த மக்கள் வியப்படைந்தனர். அந்த நாயை பாராட்டினர். வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் கூறுகையில், “இப்பகுதிகளில் வன விலங்கு நடமாட்டம் அதிகளவில் உள்ளது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்களை போன்றவர்களை வன விலங்குகள் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும்,” என்றார்.






      Dinamalar
      Follow us