ADDED : பிப் 26, 2024 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:'ஊட்டி அருகே அணிக்காடு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்,' என, வலியுறுத்தி கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில், 'குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட அணிக்காடு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
கிராமத்திற்கு மாசு கலந்த தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
நடைபாதை, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு மற்றும் சமுதாய கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டு இருந்தது.

