sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நிலுவை தொகை வழங்க வேண்டும்: சிறு விவசாயிகள் கோரிக்கை மனு

/

நிலுவை தொகை வழங்க வேண்டும்: சிறு விவசாயிகள் கோரிக்கை மனு

நிலுவை தொகை வழங்க வேண்டும்: சிறு விவசாயிகள் கோரிக்கை மனு

நிலுவை தொகை வழங்க வேண்டும்: சிறு விவசாயிகள் கோரிக்கை மனு


ADDED : மே 26, 2025 10:30 PM

Google News

ADDED : மே 26, 2025 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; 'தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,' என, சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க உறுப்பினர் ராமன் கலெக்டருக்கு அனுப்பிய மனு:

தேயிலைக்கு கட்டுபடியாகும் குறைந்த பட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் வழங்க வேண்டும்; குறிப்பாக கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு தற்போதைய விலை கிலோ ஒன்றுக்கு, 20 ரூபாய்க்கு கீழ் வழங்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, தேயிலை வாரியம் அறிவிக்கும் மாதாந்திர விலைக்கு குறையாமல் கூட்டுறவு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க 'இன்கோசர்வ்' மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த அக்., மாதத்திற்கான நிலுவை தொகை,1.40 கோடி ரூபாயை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இன்கோசர்வ் நிறுவனம் சீராக இயங்க அதற்கு நிரந்தர நிர்வாக இயக்குனர் நியமிக்க வேண்டும். அங்கு திறமையற்ற அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய மாநில அரசு, விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us