sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் நடவு

/

சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் நடவு

சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் நடவு

சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் நடவு


ADDED : ஜூலை 06, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூலை 06, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவிற்கு ஏப்., மே மாதங்களில் நடக்கும் கோடை சீசனுக்கு, அடுத்தபடியாக, அக்., நவ., மாதங்களில் இரண்டாவது சீசன் நடக்கிறது. சீசனுக்காக ஆண்டுதோறும், ஜூலை மாதம் பூங்காவில் நடவு பணிகள் துவங்கும்.

நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகளுடன், 2வது சீசனுக்கான நடவு பணி துவங்கியது. தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்து, பால்சம் மலர் நாற்றுகள் நடவு செய்து பணியை துவக்கி வைத்தார்.

அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட, 'சால்வியா, பிளாக்ஸ், ஜின்னியா, டேலியா, பேகோனியா, பேன்சி , டெல்பினியம், டெட்டூனியா, ஸ்டாக்ஸ், லிசியான்தஸ்,' உட்பட ,75 வகைகளில், 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. தோட்டக்கலை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us