ADDED : ஜன 16, 2024 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:கோத்தகிரி கக்குச்சி கிரி ஈஸ்வரா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி கக்குச்சி கிரி ஈஸ்வரா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் பண்டிகை; விளையாட்டு போட்டி நடந்தது. பள்ளி அறங்காவலர் சந்திரன் வரவேற்றார். முதல்வர் காந்தி தலைமை வைத்தார்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுத்திறன் மற்றும் நடனம், பிற விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் அமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். கணித ஆசிரியர் அரவிந்த் நன்றி கூறினார்.

