sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்

/

நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்

நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்

நகரில் சாலையோர குழிகளால் வாகனங்கள் சென்று வர சிரமம்


ADDED : ஜூலை 18, 2025 09:06 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 21வாடுகளுக்கு முறையே தண்ணீர் வினியோகிக்க, 'அம்ருத்-2.0' திட்டத்தில், 41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடையின்றி தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த, நான்கு மாதங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகம் சாலை உட்பட, முக்கியமான சாலையோரம் குழிகள் தோண்டப்பட்டு, 'மெகா' குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்தும், குழிகள் மூடப்படவில்லை. இதனால், போக்குவரத்து நிறைந்த குறுகலான சாலைகளில், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் வந்து செல்வோர், குழிகளில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் திட்ட பணியை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் செயல்படுத்துவதுடன், குழிகளை மூட நடவடிக்கை எடுப்பது அவசியம்.






      Dinamalar
      Follow us