/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூரில் பராமரிப்பு பணி; இன்று மின் தடை
/
மஞ்சூரில் பராமரிப்பு பணி; இன்று மின் தடை
ADDED : செப் 23, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சூர் : மாதாந்திர பராமரிப்பு பணியை ஒட்டி மஞ்சூரில் இன்று மின் வினியோகம் இருக்காது.
மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் சேகர் அறிக்கை: குந்தா துணை மின் நிலையத்தில் இன்று (24ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதனால், துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரக்குந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால் மட்டம், அறைஹட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கண்டி ஆகிய பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.