/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிரதம மந்திரி 'இன்டர்ன்ஷிப்' திட்டம்; கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
/
பிரதம மந்திரி 'இன்டர்ன்ஷிப்' திட்டம்; கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரி 'இன்டர்ன்ஷிப்' திட்டம்; கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
பிரதம மந்திரி 'இன்டர்ன்ஷிப்' திட்டம்; கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 30, 2025 10:19 PM
ஊட்டி; பிரதம மந்திரி 'இன்டர்ன்ஷிப்' திட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, வங்கி, நிதி சேவைகள், தகவல் மற்றும் மென்பொருள் மேம்பாடு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகிய துறைகளில் அரசு, 12 மாத கட்டணம் இல்லா பயிற்சி வழங்குகிறது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு , ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப் படிப்பு வரை படித்து முடித்த, 21- முதல் 24 வயது வரை உள்ள மாணவ, மாணவியர், https://pmintership.mca.gov என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு, 31ம் தேதி (இன்று) விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அத்தியாவசிய தேவைக்கு ஒரு முறை மட்டும் மானியமாக , 6,000 ரூபாய் வழங்கப்படும். தகவலுக்கு, 0423- -2954425 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.