sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தற்காலிக சீரமைப்பு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

/

தற்காலிக சீரமைப்பு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

தற்காலிக சீரமைப்பு பணிக்கு மக்கள் எதிர்ப்பு

தற்காலிக சீரமைப்பு பணிக்கு மக்கள் எதிர்ப்பு


ADDED : அக் 17, 2024 10:04 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாஒர் செம்பாலா அருகே, சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூடலுார் - கோழிக்கோடு சாலை, உள்ளூர் மற்றும் கேரளமாநிலம் வயநாடு, மலப்புரம், திருச்சூர் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளின் வாகன போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாகும்.

இச்சாலையில், செம்பாலா முதல் நாடுகாணி வரையிலான சாலை சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.

ஆனால், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரையிலான, 2 கி.மீ., சாலை சீரமைக்க வில்லை. தற்போது பெய்து வரும் மழையில் சாலை மேலும் சேதமடைந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை சீரமைக்க ஓட்டுனர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செம்பாலா பகுதியில், சேதமடைந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க, இரு நாட்களுக்கு முன் பாறை பொடி கலந்த ஜல்லிகற்கள் எடுத்து வரப்பட்டு சாலையோரம் கொட்டப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சேதம் அடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிரந்தரமாக சீரமைக்க வலியுறுத்தினர். இதனால், ஊழியர்கள் தற்காலிக சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றனர்.

மக்கள் கூறுகையில், 'சேதமடைந்த இப்பகுதி சாலை ஏற்கனவே, பலமுறை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. எனவே, இப்பகுதியை, நிரந்தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us