sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போதை பொருள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை

/

போதை பொருள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை

போதை பொருள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை

போதை பொருள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை


ADDED : பிப் 04, 2025 07:48 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற, 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 600 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருளை பஸ்சில் கடத்தி வந்தவரிடம், கூடலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து அரசு பஸ்சில் விலை உயர்ந்த போதைபொருளை கேரளாவுக்கு கடத்துவதாக, நீலகிரி மாவட்டம், கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம், காவலர் பிரபா ஆகியோர், நேற்று இரவு தொரப்பள்ளி அருகே உள்ள, வன சோதனை சாவடி அருகே, வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து, கேரள மாநிலம் செல்லும் கேரள மாநில அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.

அதில், கேரளா பாண்டிக்காடு மேலாட்டு பகுதியை சேர்ந்த முகமது சபீர்,32, என்பவர், எம்.டி.எம். ஏ., என்ற விலைஉயர்ந்த, 600 கிராம் போதை பொருளை, பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, முகமது சபீரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் கூறுகையில்,'முகமது சபீரிடமிருந்து, 600 கிராம் எம்.டி.எம்.ஏ., என்ற போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு, 24 லட்சம் ரூபாய் ஆகும். இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us