/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் காற்றுடன் மழை; தொட்டபெட்டா சிகரம் மூடல்
/
ஊட்டியில் காற்றுடன் மழை; தொட்டபெட்டா சிகரம் மூடல்
ADDED : ஜூலை 25, 2025 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால், பாதுகாப்பு கருதி, தொட்டபெட்டா சிகரம் நேற்று மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, மழையுடன், வேகமாக காற்று வீசி வருகிறது. இதனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், நேற்று மழை அதிகரித்து காணப்பட்டதால், தொட்டபெட்டா சிகரம் சூழல் சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால், சிகரத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.