sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

/

மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு

மார்ச் முதல் மே மாதம் வரை சராசரி அளவை விட மழை பொழிவு அதிகரிப்பு! கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவு


ADDED : ஜூன் 02, 2025 11:59 PM

Google News

ADDED : ஜூன் 02, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை கோடை மழையின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால், கோடை மழை ஜன., முதல் மே மாதம் வரையும்; தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்., வரையும்; வடகிழக்கு பருவ மழை அக் ., முதல் டிச ., மாதம் வரை பெய்வது வழக்கம்.

பருவ மழையை நம்பி குறிப்பாக மின் உற்பத்தி, மலை காய்கறி, தேயிலை மற்றும் காபி பயிர்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையை கொடுத்து வருகிறது. 'நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி,' என, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள, 3 லட்சம் குடும்பங்களின் நீராதார தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

ஆண்டு சராசரி மழையளவு


மாவட்டத்தில்ஆண்டு சராசரி மழை அளவு, 130 செ.மீ., ஆகும். நடப்பாண்டில், ஜன ., முதல் மே மாதம் இறுதி வரை, 28 செ.மீ., மழை பெய்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இது சராசரி மழை அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழையை நம்பி, மாவட்டத்தின் கூட்டு குடிநீர், பில்லுார் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், ஈரோடு மாவட்டங்களில், 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

சாகுபடிக்கான நீர் தேவை


நீலகிரியை பொறுத்தவரை, 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை மற்றும் 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு அந்தந்த காலங்களில் பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே விவசாயம் பாதிப்பில்லாமல் மேற்கொள்ள முடியும். தற்போது, மே மாதம் பெய்த மழை மாவட்டத்தின் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை வழங்கி உள்ளது.

காலநிலை மாற்றத்தால் வருகை குறைவு


ஊட்டி கோடை சீசன் ஏப்., மே மாதங்களில் நிலவுகிறது. நடப்பாண்டின் கோடை சீசன் சமயங்களில் கூடுதல் மழை பொழிவு ஏற்பட்டதாலும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதாலும், சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.

கடந்த, 2016ம் ஆண்டு இரு மாதங்களில், 8.8 லட்சம்; 2017ல்- 9 லட்சம்; 2019ல் - 10 லட்சம்; 2022ல் - 7.5 லட்சம்; 2023ல் - 9 லட்சம்; 2024ல் - 7 லட்சம்; 2025ல் - 6.10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். (2020----21 -கொரோனா காலம்).

மூன்று மாதங்களில் 182 சதவீதம் கூடுதல் மழை...

பேரிடர் மேலாண்மை தாசில்தார் தினேஷ் குமார் கூறுகையில், ''நீலகிரி மாவட்ட மழையளவு, ஐ.எம்.டி., கணக்குப்படி ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே இறுதி வரை பதிவு செய்யப்படுகிறது. அதன் படி, கடந்த, 2022ம் ஆண்டு, 366 மி.மீ., மழை அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சராசரி மழை அளவை விட, 73 சதவீதம் கூடுதலாகும். 2023ம் ஆண்டு 267 மி.மீ., மழை அளவு பதிவானது. 25 சதவீதம் கூடுதலாகும். 2024ம் ஆண்டில், 317 மி.மீ., மழை அளவு பதிவானது. 49 சதவீதம் கூடுதலாகும். 2025ம் ஆண்டில் இதுவரை, 600 மி.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது. இது, 182 சதவீதம் கூடுதலாகும். கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று மாத கணக்குப் படி கூடுதலாக மழை பெய்துள்ளது,'' என்றார்.



வருகை குறைவு

ஊட்டி கோடை சீசன் ஏப்., மே மாதங்களில் நிலவுகிறது. நடப்பாண்டின் கோடை சீசன் சமயங்களில் கூடுதல் மழை பொழிவு ஏற்பட்டதாலும், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதாலும், சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கடந்த, 2016ம் ஆண்டு இரு மாதங்களில், 8.8 லட்சம்; 2017ல்- 9 லட்சம்; 2019 ல் - 10 லட்சம்; 2022ல்- 7.5 லட்சம்; 2023ல்- 9 லட்சம்; 2024ல் - 7 லட்சம்; 2025ல்- 6.10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். (2020----21 --கொரோனா காலம்).








      Dinamalar
      Follow us