/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தன்னம்பிக்கை வளர புத்தகம் வாசியுங்கள் அருவங்காடு நுாலகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை
/
தன்னம்பிக்கை வளர புத்தகம் வாசியுங்கள் அருவங்காடு நுாலகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை
தன்னம்பிக்கை வளர புத்தகம் வாசியுங்கள் அருவங்காடு நுாலகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை
தன்னம்பிக்கை வளர புத்தகம் வாசியுங்கள் அருவங்காடு நுாலகத்தில் மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : ஏப் 25, 2025 11:54 PM
குன்னுார்; 'உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்,'என, தெரிவிக்கப்பட்டது.
அருவங்காடு கிளை நுாலகத்தில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது. தலைமை வகித்த, நுாலகர் ஜெய்ஸ்ரீ பேசுகையில்,''ஆண்டுதோறும், ஏப்., 23ல் உலக புத்தக தினம் ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பால் கொண்டாடப்படுகிறது. வாசிப்பின் சக்தியை மக்கள் அடையாளம் காண இந்நாள் வாய்ப்பாக அமைகிறது. உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தினால் எழுத்து மீதான ஆர்வம் துாண்டப்பட்டு, எழுத்துகளை பின்னாளில் பிரசுரிக்கவும் உதவும். புத்தகம் வாசிப்பதால், கல்வி அறிவு, புரிதல், தெளிவு கிடைக்கிறது.
மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன. ஒரு நல்ல புத்தகம், 100 நண்பர்களுக்கு சமம். ஒரு நாளில் குறைந்தது, 20 நிமிடங்களாவது, பிடித்த புத்தகத்தின் சில பக்கங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் வாசிப்பு பழக்கம் ஏற்பட்டு நிரந்தர பழக்கமாகும்,'' என்றார். அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளி மாணவ, மாணவியர், வாசகர்கள், நுாலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் பங்கேற்று, ஒன்றாக அமர்ந்து தங்களுக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து வாசித்தனர்.

