sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'புத்தகம் வாசிப்பது உயிர் வாழ சுவாசிப்பதற்கு சமம்': கோத்தகிரியில் நடந்த திருவிழாவில் தகவல்

/

'புத்தகம் வாசிப்பது உயிர் வாழ சுவாசிப்பதற்கு சமம்': கோத்தகிரியில் நடந்த திருவிழாவில் தகவல்

'புத்தகம் வாசிப்பது உயிர் வாழ சுவாசிப்பதற்கு சமம்': கோத்தகிரியில் நடந்த திருவிழாவில் தகவல்

'புத்தகம் வாசிப்பது உயிர் வாழ சுவாசிப்பதற்கு சமம்': கோத்தகிரியில் நடந்த திருவிழாவில் தகவல்


ADDED : ஆக 21, 2025 07:57 PM

Google News

ADDED : ஆக 21, 2025 07:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரியில் நடந்த புத்தக திருவிழாவில், 'புத்தகம் வாசிப்பது, உயிர் வாழ சுவாசிப்பதற்கு ஒப்பானது' என, தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிளை நுாலகம் வாசகர் வட்டம் சார்பில், ஐந்து நாள் புத்தக திருவிழா துவங்கி நடந்து வருகிறது. தொழிலதிபர் போஜராஜன், துவக்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் மாதன் தலைமை வகித்தார்.

இதில், 15க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின், ஸ்டால்களில், அறிவியல் இலக்கியம் ஆன்மிகம் உட்பட பல பாடங்கள் தொடர்புடைய, பல்லாயிரம் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, கோளரங்கம் நிகழ்ச்சி, மாணவர்களை ஆச்சரியப்பட வைத்தது. தவிர, டெலஸ்கோப், சூரியனை காணுதல், வெர்ச்சுவல் கேமரா போன்ற நவீன கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம், இலவசமாக புத்தகம், காலண்டர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், 'கிரீன் சாம்பியன் அவார்டு' விருது பெற்ற பாக்கியநகர் பள்ளி அறிவியல் ஆசிரியர் சுந்தரம் லிங்கப்பன், விஞ்ஞானி ஜனார்த்தனன், எழுத்தாளர் முனைவர் லிங் கன், ஐந்தாம் வகுப்பில் கதை எழுதி புத்தகமாக வெளியிட்ட கேசலாடா அரசு தொடக்கப்பள்ளி மாணவி ஸ்ரீ யக்ஷா, ஜி.பி.ஆ., பள்ளி ஆசிரியை சித்ரா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசுகையில், ''புத்தகம் வாசிப்பது உயிர் வாழ சுவாசிப்பதற்கு ஒப்பானது. புத்தகம் ஒரு மனிதனை உருவாக்குகிறது. 'கடையனுக்கும் கடைத்தேற்றம்,' என்ற புத்தகம், ஒரு மகாத்மா காந்தியை உருவாக்கியது. 'மூலதனம்' என்ற புத்தகம் உலக வரலாற்றை மாற்றி எழுதியது. சார்லஸ் டார்வின் எழுதிய 'உயிரினங்களின் தோற்றம்' என்ற புத்தகம் அறிவியல் வரலாற்றை மாற்றியமைத்தது. மாணவர்களை புத்தக வாசிப்பை நேசிக்க வேண்டும்,'' என்றார்.

மாவட்ட நுாலக அலுவலர் கிளமென்ட், கோத்தகிரி கிளை நுாலகர் அமுதா, நெஸ்ட் அறக்கட்டளை நிர்வாகி ராமதாஸ், பொறங்காடு சீமை செயலாளர் போஜன், தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினர். லயன்ஸ் கிளப் செயலாளர் சரவணன் வரவேற்றார். வாசகர் வட்ட செயலாளர் ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us