sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'பட்டம் இதழை படித்தால் எதிர்காலம் வளமாகும்' : வினாடி - வினா போட்டியில் அசத்திய டியூஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

/

'பட்டம் இதழை படித்தால் எதிர்காலம் வளமாகும்' : வினாடி - வினா போட்டியில் அசத்திய டியூஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

'பட்டம் இதழை படித்தால் எதிர்காலம் வளமாகும்' : வினாடி - வினா போட்டியில் அசத்திய டியூஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்

'பட்டம் இதழை படித்தால் எதிர்காலம் வளமாகும்' : வினாடி - வினா போட்டியில் அசத்திய டியூஷ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள்


ADDED : ஜன 14, 2025 01:41 AM

Google News

ADDED : ஜன 14, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:

'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி, வினா போட்டியில், பந்தலுார் டியூஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் உடனுக்குடன் பதில் அளித்து பரிசுகளை வென்றனர்.

'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வினாடி, வினா விருது, '2024-25' போட்டி நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு வினாடி, வினா போட்டி பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், ஸ்ரீ சரஸ்வதி விவேகானந்தா வித்தியாலயா பள்ளியில் நடந்தது. அதில், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. கோ-ஸ்பான்சராக சத்யா ஏஜன்சி இணைந்துள்ளது.

அதில், பள்ளி அளவில் வினாடி, வினா மாணவர்களுக்கான போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதிப் போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதன்படி, பந்தலுார் டியூஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, வினாடி வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 50 பேர் எழுதினார். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது.

தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 10-ம் வகுப்பு மாணவன் சுபிசேரன் முதலிடம்; 11ம் வகுப்பு மாணவன் தரண், 2-ம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் சுசீந்திரநாத் தலைமையில், ஆசிரியர்கள் மகேஷ்வரன், விக்னேஷ்வரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மேற்பார்வையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.--

தவறாமல் படிக்க வேண்டும்

சுசீந்திரநாத், முதல்வர் : -தற்போதைய காலகட்டத்தில் செய்தித்தாள் வாசிப்பு குறைந்து வருகிறது. இதனால், மாணவர்களின் நினைவாற்றல் மற்றும் வாசிப்பு திறன் குறைந்து வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில், 'தினமலர்' பட்டம் இதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் வாசிக்கும் விதமாக அனைத்து தகவல்கள் அடங்கிய, வண்ண புகைப்படங்களுடன் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தினசரி செய்தித்தாள் வாசிப்பை மேம்படுத்தி கொள்ளவும், பட்டம் இதழை தவறாமல் வாசிக்கும் வேண்டும்.



'பட்டத்தை' படித்தால் பயன்

சுபிசேரன், மாணவர் : பட்டம் இதழில் வண்ணப்படங்களுடன் வெளியாகும் அறிவியல், கணிதம், வரலாற்று நிகழ்வுகள், பல அரிய கண்டுபிடிப்புகள், மற்றும் தலைவர்கள் குறித்து தகவல்களை, எளிதாக படித்து தெரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து, பட்டம் படிப்பதன் மூலம், போட்டி தேர்வுகளை எளிதாக எழுத முடியும். பொது இடங்களில் எந்த கேள்விக்கும் பதில் கூற நம்மை தயார் படுத்திக் கொள்ள ஏதுவாகும். எனவே, பட்டத்தை படித்தால் பயன் நிச்சயம்.



எளிதாக மனதில் பதிய வைப்பேன்

தரண், மாணவர் : --நாள்தோறும் படிக்கும் புத்தகங்களில் பல்வேறு பொது அறிவு தகவல்கள் கிடைத்த போதும், பட்டம் இதழில் படங்கள் மற்றும் முழுமையான தகவல்களுடன், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில் வெளியாவது எங்களை கவர்ந்து உள்ளது. பட்டம் இதழை விரும்பி படிக்கும்போது, மனதில் எளிதாக பதிய வைத்து கொண்டு திரும்பவும் அதனை தேர்வுகளின் போது வெளிப்படுத்த முடிகிறது.








      Dinamalar
      Follow us